Friday, March 15, 2013

இரத்த பேதி குணமாக

அத்திப்பட்டை, நாவல் பட்டை, கருவேலம் பட்டை, நறுவிளம் பட்டை சம அளவு சேர்த்து, பொடி செய்து, 50 கிராம் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி நாள்தோறும் 3 வேளை குடித்து வர இரத்த பேதி, சீதபேதி குணமாகும்.


பாட்டி வைத்தியம்.,

நீரழிவு நோய் குணமாக

மாமரத்தின் தளிர் இலையை உலர்த்தி பொடியாக்கி வைத்து கொள்ளவும். 1 ஸ்பூன் வெந்நீரில் கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நீரழிவு நோய் குணமாகும்.


பாட்டி வைத்தியம்.,

Sunday, March 3, 2013

மலச்சிக்கல் சரியாக

அகத்தி கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை மற்றும் மாலை 1 ஸ்பூன் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலசிக்கல் குணமாகும்.


பாட்டி வைத்தியம்.,

வாதநோய் குணமாக

குப்பைமேனி இலை சாறு எடுத்து தினசரி 1 ஸ்பூன் சாப்பிட்டு வர வாத நோய் குணமாகும்.

பாட்டி வைத்தியம்.,

நுரையீரல் நோய் குணமாக

நாயுறுவி செடியின் விதைகளை காய வைத்து இடித்து தூள் செய்து சலித்து பாட்டிலில் வைத்து தினசரி காலை, மாலை இருவேளை 10 மில்லி பாலில் கலந்து சாப்பிட்டு வர நுரையீரல் நோய் குணமாகும்.


பாட்டி வைத்தியம்.,

காதுவலி குணமாக

வெற்றிலை சாறை காதில் விட்டால் காதுவலி குணமாகும்.


பாட்டி வைத்தியம்.,

வயிற்று நோய் குணமாக

சீரகத்தை வருத்து பொடி செய்து மோரில் கலந்து சாப்பிட வயிற்று நோய் குணமாகும்.

பாட்டி வைத்தியம்.,

சீதபேதி குணமாக

புளியங்கொட்டை தோல் மற்றும் மாதுளம் பழத்தோல் சம அளவு இடித்து தூள் செய்து பசும்பாலில் சாப்பிட சீதபேதி குணமாகும்.

பாட்டி வைத்தியம்.,

சிலந்தி கடிக்கு மருந்து

தும்பை இலை சாறு எல்லா விஷகடிகளுக்கும் சிறந்த மருந்து.எனவே தும்பை இலை சாறு சாப்பிடவும்.

பாட்டி வைத்தியம்.,